PUDHUMAI PENN SCHEME | புதுமை பெண் திட்டம் | Phase 2

 புதுமை பெண் திட்டம்

தமிழக அரசு பெண்கள் அரசு பள்ளியிலிருந்து உயர்கல்வி பெறும் விகிதத்தை உயர்த்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில்  6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு / தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் 1,000  ரூபாய் வழங்கப்படும்.




விண்ணப்பிக்கும் முறை

  • இது வரை 2, 3, மற்றும் 4-ம் ஆண்டில் பயிலும் மாணவிகள் இத்திட்டத்தில் உதவி  தொகையை பெற்று பயன் அடைந்துள்ளார்கள்.
  • தற்போது இவ்வலைத்தளத்தில் (https://www.pudhumaipenn.tn.gov.in) முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.
  • மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்யவேண்டும்,  நேரடியாக விண்ணப்பிக்கக்கூடாது.
  • மேலும், தற்போது 2, 3,  மற்றும் 4ம் ஆண்டுகளில் படிக்கும்  கல்லூரி மாணவிகள், முதற்கட்டத்தில் இத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள், தற்போது விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்கும் பொழுது ஆதார் எண், EMIS எண் வைத்திருக்க வேண்டும். 
  • விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்யும் போது அவர்களின் ஆதார் OTP ஐப் பகிர்ந்து கொள்ளவும் மற்றும் அவர்களின் தனிப்பட்ட மற்றும் கல்வி விவரங்களை அந்தந்த கல்வி நிறுவனங்களுடன் உறுதிப்படுத்தவும் மாணவிகள் உடனிருக்க வேண்டும்.

குறிப்பு: EMIS எண் இல்லாதவர்களும் பதிவு செய்யலாம்.


தகுதிகள்

  • அரசு பள்ளிகளில்  6 முதல் 12-ம் வகுப்பு வரை  பயன்ற மாணவிகள் மட்டுமே  இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள்.


தேவையான ஆவணங்கள்

  • ஆதார் அட்டை (சுய மற்றும் வங்கி கணக்கு விவரங்களுக்காக)
  • மாற்றுச் சான்றிதழ் (கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண்ணுக்காக EMIS NO)


தெரிந்துகொள்ள வேண்டியவைகள்

  • ஆதார் எண்ணுடன் கைப்பேசி எண் இணைத்திருக்க வேண்டும்
  • வங்கி கணக்குடன் ஆதார் எண்  இணைத்திருக்க வேண்டும்.
  • கீழ்கண்ட ஏதேனும் ஒரு வங்கியில் வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும்.
    • Indian Overseas Bank
    • Indian Bank
    • State Bank of India
    • Canara Bank



Comments